கள்ளக்குறிச்சியில் 8 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 3 பேர் கொலை

by Staff / 20-04-2023 04:26:43pm
கள்ளக்குறிச்சியில் 8 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 3 பேர் கொலை

கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி ‌(35) இவரது கணவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்த  நிலையில், வளர்மதி தனது 11 வயது மகன் தமிழரசன் மற்றும் 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோருடன் தனியாக வசித்து வருகிறார். மேலும் வளர்மதி ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்து வந்ததார்.இந்த நிலையில் வளர்மதி வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் கள்ளக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது, வீட்டின் உள்ளே வளர்மதி மற்றும் அவரது 11 வயது மகன் தமிழரசன் மற்றும் எட்டு மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோர்‌ கழுத்தறுத்துக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர்.தொடர்ந்து மூவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னா், சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கொலை சம்பவத்தின் குற்றவாளி கைது செய்வதற்கு ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via