கரும்புச்சாறு எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி
தருமபுரி சவுளூரைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அனிதா. தொப்பூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தனர். கடையில் மின்சாரத்தால் இயங்கும் கரும்பு சாறு பிழியும் எந்திரம் உள்ளது. நேற்று அனிதா வழக்கம்போல் எந்திரத்தில் கரும்பு சாறு பிழித்து கொண்டிருந்தார். அவர் தனது கழுத்தை சுற்றி துப்பாட்டா அணிந்திருந்தார். அப்போது அனிதாவின் துப்பட்டா எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கியதில், அவரது கழுத்தை இறுக்கி மூச்சு விட முடியாமல் திணறினார். அவரது கணவர் ஓடிவந்து மின்சாரத்தை துண்டித்தார். பின்னர் அனிதாவை தருமபுரியில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags :