கர்ப்பிணிக்கு சித்திரவதை குழந்தை பலி
தெலுங்கானாவில் உள்ள அட்சம்பேட்டா மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் இயற்கையான பிரசவத்திற்காக சித்ரவதை செய்யப்பட்டார். நகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா, பிரசவ வலி காரணமாக கடந்த 25ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண பிரசவம் பார்ப்பதற்காக அறைக்குள் சென்ற மருத்துவர்கள், ஊழியர்கள் கர்ப்பிணியில், கைகளை பிடித்து வயிற்றில் அடித்து பிரசவம் பார்த்தனர். மயக்க நிலையில் இருந்த குழந்தையை ஹைதராபாத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :