விஏஓ கொலையில் மேலும் ஒருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). இவர் நெல்லையை அடுத்த முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரி பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்து பணியில் ஈடுபட்டார். மதியம் 12 மணி அளவில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அங்கிருந்து வெளியே ஓடிவந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :