ஆயுதங்களுடன் தங்கியிருந்த 6 இளைஞா்கள் கைது.

by Staff / 30-04-2023 02:58:56pm
ஆயுதங்களுடன் தங்கியிருந்த 6 இளைஞா்கள் கைது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வாரச் சந்தை அருகே தனியாா் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதியின் 2 அறைகளில் 6 இளைஞா்கள் வெள்ளிக்கிழமை இரவு தங்கினா். விடுதியின் ஊழியா்களுக்கு அந்த இளைஞா்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, இதுதொடா்பாக கமுதி காவல்துறையினருக்தத் தகவல் தெரிவித்தனா்.இதையடுத்து, கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் ப. மணிகண்டன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் அந்த விடுதிக்குச் சென்று அந்த இளைஞா்கள் தங்கியிருந்த அறைகளில் சோதனையிட்டனா்.அந்த அறைகளில் 15, 16 வயதுகளில் இரு சிறுமிகள் இருந்தனராம். மேலும், அந்த அறைகளிலிருந்து 2 அரிவாள், ரூ. 37 ஆயிரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.  காவல் நிலையத்தில் வைத்து அந்த இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
 

 

Tags :

Share via