பயங்கரவாத தாக்குதலில் 95 பேர் மாயம்

by Staff / 28-03-2024 11:44:32am
பயங்கரவாத தாக்குதலில் 95 பேர் மாயம்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 95 பேர் மாயமாகியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. குரோகஸ் சிட்டி ஹால் மீதான தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்ட நிலையில், 182 பேர் காயமடைந்தனர். ஆனால், அவர்களைத் தவிர, தாக்குதலின் போது அங்கிருந்த 95 பேரைக் காணவில்லை என்று செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அரசாங்கத்திடம் இது குறித்து முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via