நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்

by Staff / 27-04-2024 02:31:14pm
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்

மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளின் பட்டியலை அமலாக்கத்துறை திரட்டியுள்ளது. இது தொடர்பாக விரைவில் சம்மன் கொடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக, நேற்று முன் தினம் திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். மாவட்ட ஆட்சியர்களிடம் சுமார் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

 

Tags :

Share via