தலைமறைவாக இருந்த சாராய வியாபாரி கைது

by Staff / 06-07-2023 04:02:26pm
தலைமறைவாக இருந்த சாராய வியாபாரி கைது சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள பலச்சக்கல்பட்டி ஏரி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் காட்சி கொண்டு இருந்த நபர்களை கெங்கவல்லி காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்த போது போலீசார் பிடியிலிருந்து ஒருவர் தப்பிச் சென்றார் அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கெங்கவல்லி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பழனிமுத்து மகன் பிரபு என்பது தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் கடந்த ஓராண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார் இந்த நிலையில் நேற்று பிரபு கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் கெங்கவல்லி போலீசார் நடுவலூரில் பதுங்கி இருந்த பிரபுவை சுற்றிவழித்து பிடிக்க முயற்சித்த போது மீண்டும் போலீசாரை தள்ளிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார் உடனடியாக கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உள்ளிட்ட காவல்துறையினர் அவரை துரத்தி பிடித்து கைது செய்தனர். ஓராண்டாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பிரபல சாராய வியாபாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்
 

Tags :

Share via