பாஜக நிர்வாகிகளை விரட்டியடித்த குளச்சல் மீனவர்கள்

by Staff / 25-03-2024 02:56:23pm
பாஜக நிர்வாகிகளை விரட்டியடித்த குளச்சல் மீனவர்கள்


கேரளா மாநில மீனவர்கள் மற்றும் குளச்சல் மீனவர்கள் 85 பேர், 5 விசைப்படகுகளை கடந்த 20-ஆம் தேதி, தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தனர். அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட மீனவர்கள் குளச்சல் துறைமுகம் வந்தபோது தங்கள் முயற்சியால் விடுவிக்கப்பட்டதாக கூறி வரவேற்க வந்த பா.ஜ.க மீனவரணி நிர்வாகி சீமா உள்ளிட்டோரை சக மீனவர்கள் விரட்டியடித்தனர். மீனவர்கள் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தால் குளச்சல் துறைமுகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

 

Tags :

Share via