கெஜ்ரிவால் ராஜினாமாவா? போரை அறிவித்த ஆம் ஆத்மி
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். மார்ச் 28 வரை அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, சிறையில் இருக்கும் கெஜ்ரிவால்,வெளியே இருந்த கெஜ்ரிவாலை விட ஆபத்தானவர், உங்களுக்கு (பாஜக) அவரை பற்றி முழுமையாகத் தெரியாது. இனி முழுவீச்சில் போர் தான். முன்பு, நாங்கள் டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவுகளைப் பெற்றோம், இப்போது சிறையில் இருந்து உத்தரவுகளைப் பெறுவோம்.
Tags :