மும்பையில் 2வது ஜி-20 மாநாடு

by Staff / 03-05-2023 01:04:35pm
மும்பையில் 2வது ஜி-20 மாநாடு

ஜி-20 பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழுவின் இரண்டாவது கூட்டம் மும்பையில் மே 23 முதல் 25 வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். பேரிடர் மேலாண்மை துறையின் கட்டுப்பாட்டு அறை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகராட்சி கட்டிடத்தின் பாரம்பரிய நடைபயணத்தை இந்த கூட்டம் உள்ளடக்கும். பேரிடர் மேலாண்மைத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக மும்பை ஆற்றிய பணிகள் தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. G-20 கவுன்சிலின் பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழுவின் கூட்டம் இந்த சாதனையை உலகிற்கு எடுத்துரைக்கும் வாய்ப்பாகும்.

 

Tags :

Share via