கோவில் குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

by Editor / 24-07-2021 03:47:36pm
 கோவில் குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

 


திருவள்ளூர் மாவட்டம் புதுக்கும்மிடிபூண்டியில் கோயில் குளத்தில் மூழ்கி 2 பெண்கள், 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் புதுக்கும்மிடிபூண்டியில் அங்காளம்மன் கோயில் உள்ளது. இதன் அருகிலேயே கோயில் குளமும் உள்ளது. இக்குளத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் துணி துவைப்பது வழக்கம். அதன்படி காலை புதுக்கும்மிடிபூண்டியைச் சேர்ந்த சுகந்தி(38), சுமதி(35) ஆகியோர் துணி துவைக்கச் சென்றனர். இவர்களுடன் குழந்தைகள் அஸ்விதா(14), ஜீவிதா(14), ஜோதி(10) ஆகியோர் சென்றனர்.சுகந்தியும், சுமதியும் துணி துவைத்துக் கொண்டிருந்த போது சிறுமிகள் குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.


அப்போது ஒரு குழந்தை குளத்தில் இறங்கியது. இதைக்கண்டதும் மற்ற குழந்தைகளும் குளத்தில் இறங்கியதால் தண்ணீரில் சிக்கி கூச்சலிட்டனர். இதை பார்த்த சுகந்தியும், சுமதியும் குழந்தைகளை மீட்க குளத்தில் இறங்கிய போது சேற்றில் சிக்கி அவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.சிறிது நேரத்தில் 5 பேரும் தண்ணீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி பலியாகினர்.


இதையறிந்த சிப்காட் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். குளத்தில் மூழ்கி இரண்டு பெண்கள், மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via

More stories