மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது

by Staff / 12-05-2023 11:51:41am
மாணவியை பலாத்காரம் செய்த  ஆசிரியர் கைது

பாலக்காடு சாலிசேரியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் விளையாட்டு ஆசிரியர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய பெருமானூர் பகுதியைச் சேர்ந்த முபாஷிர் என்பவரை, மலப்புரத்தில் இருந்து சாலிசேரி போலீசார் கைது செய்தனர். 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் முபாஷிர் பலாத்காரம் செய்துள்ளார். குற்றவாளிக்கு உதவிய சாலிசேரியைச் சேர்ந்த ஷபிலன் என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் பட்டாம்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முபாஷிர் மேலும் பல மாணவிகளை துன்புறுத்தி உள்ளரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via