பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 2 சிறுமிகள் பலி

by Staff / 15-05-2023 04:07:51pm
பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 2 சிறுமிகள் பலி

ராணிப்பேட்டை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது சலீம் என்பவர் ஆந்திரா மாநிலத்தில் துக்க நிகழ்விற்கு சென்றுவிட்டு காரில் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில், ராணிப்பேட்டை சிப்காட் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via