இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

by Staff / 16-05-2023 12:18:19pm
இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் போலீஸ் இன்ஸ்பெக்டரை பலர் நடைபாதையில் வைத்து தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. செக்டர் 94 சந்திப்பு அருகே, காரை நிறுத்துவது தொடர்பாக இன்ஸ்பெக்டருக்கும் அப்பகுதியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்ஸ்பெக்டரை அடித்து நொறுக்கினர். அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும் அவர்கள் கேட்காமல் தாக்குதல் நடத்தினர். இதில், இன்ஸ்பெக்டரின் சீருடையும் கிழிந்தது. இந்தச் சம்பவத்தில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via