3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

by Staff / 16-05-2023 01:42:46pm
3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் நியூயார்க்கில் இளைஞர் ஒருவர் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இரண்டு போலீஸ்காரர்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர். 18 வயது இளைஞரை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டது. குற்றவாளியின் பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நாள்தோறும் அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. துப்பாக்கி கலாச்சாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து மக்களின் நிம்மதியை பறித்துள்ளது.

 

Tags :

Share via

More stories