நள்ளிரவில் பயங்கர விபத்து.. 10 பேர் பலி

by Staff / 16-05-2023 01:05:25pm
நள்ளிரவில் பயங்கர விபத்து.. 10 பேர் பலி

நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள நான்கு மாடி தங்கும் விடுதியில் மதியம் 12:30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியதில் 10 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. பலர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து ஏற்பட்ட விடுதியில் மொத்தம் 92 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு 52 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் 20 பேரை காணவில்லை. இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags :

Share via