40 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிமாற்றம் செய்த மல்லையா ரூபாய் 2000 அபராதம் நான்கு மாதங்கள் சிறை தண்டனை

by Editor / 11-07-2022 03:44:30pm
40 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிமாற்றம் செய்த மல்லையா  ரூபாய் 2000 அபராதம் நான்கு மாதங்கள் சிறை தண்டனை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் நான்கு மாத சிறை தண்டனை விதித்துள்ளது. இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்ற நிலையில். கடந்த 2014ஆம் ஆண்டு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தனது குழந்தைகளுக்கு பரிமாற்றம் செய்தார் விஜய் மல்லையா. இந்த தகவலை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கத வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. மேலும் 40 மில்லியன் அமெரிக்க டாலரை வட்டியுடன் 4 வாரங்களுக்குள் திருப்பி செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via