யானை தாக்கி ஒருவா் பலத்த காயம்

by Admin / 18-05-2023 10:25:52am
 யானை தாக்கி ஒருவா் பலத்த காயம்

தென்காசி மாவட்டம் கடைநல்லூர் அருகே உள்ள கருப்பநதி அணைப்பகுதியில் மழைவாழ் மக்கள் 15- குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் நேற்று மலையில் தேன் எடுப்பதற்காக வேல்த்துரை, இவரது மனைவி உமா, இவரது இரண்டு குழந்தைகள் இதேபோன்று சந்திரன்(48) இவரது மனைவி மணி மற்றும் இவரது இரண்டு குழந்தைகள் மற்றும் முதியவர் முத்துச்சாமி ஆகியோர் தேன் எடுக்க சென்ற நிலையில் இரவு நேரமாகிட்டத்தால் அப்பகுதியில் தோப்பு பகுதியில் தங்கயுள்ளர். 

இந்நிலையில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த யானை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேல்த்துரை தாக்கிய நிலையில் சுமார் 100 - அடி தூரம் இழுத்து சென்றுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர் கூச்சிலிட்டு யானை விரட்டும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னர் கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர் உயிரிருக்கு போராடிகொண்டிருந்த வேல்த்துரை  மீட்டு வனத்துறை ஜீப் மூலம்  கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக சொக்கம்பட்டி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகிறனர்.

 

 யானை தாக்கி ஒருவா் பலத்த காயம்
 

Tags :

Share via