ஹனி ட்ராப்பில் பணம் பறித்த இளம்பெண் உட்பட இருவர் கைது

by Staff / 25-05-2023 12:58:53pm
ஹனி ட்ராப்பில் பணம் பறித்த இளம்பெண் உட்பட இருவர் கைது

எர்ணாகுளம் டவுன் தெற்கு நகரில் 'ஹனி ட்ராப்' மூலம் பணம் பறித்த இருவரை கைது செய்தனர். இந்த வழக்கில் சரண்யா (20), மலப்புரம் வாழக்காட்டைச் சேர்ந்த அர்ஜூன் (22) ஆகியோர் கைதாகினர். இடுக்கி அடிமாலி பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி தனியான சந்திக்கலாம் என அழைத்துள்ளார். இதனை நம்பி எர்ணாகுளத்திற்கு வந்த இளைஞரை, திட்டமிட்டபடி, இளம்பெண்ணின் நான்கு ஆண் கூட்டாளிகளும் ஒன்றாக சேர்ந்து அடித்து, பணம் மற்றும் ஏடிஎம் அட்டைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via