காணாமல் போகும் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் 

by Editor / 29-05-2023 09:45:53am
காணாமல் போகும் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் 

 

திருவேங்கடம் பனவடலிசத்திரம் வன்னிகோனேந்தல் ஆகிய அரச மருத்துவமனையில் இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மீண்டும் இயக்கக்கோரி தெருமுனைக் கூட்டம் நடத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்.

தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வாகனம் சிறப்பாக இயக்கம் நடைபெற்று வந்தது.தற்போது சில மாதங்களாக பல ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது திருவேங்கடம், பனவடலிசத்திரம், வன்னிக்கோனந்தல் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் தற்போது செயல்பாட்டில் இல்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டுகிறார்கள்.மேலும் 
செங்கோட்டை,மேலகரம்,இலத்தூர்,தென்காசி,கடையம்,பாவூர்சத்திரம்,கடையநல்லூர் ஆகிய பகுதிகளிலுள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்  இரவு நேரங்களில் இயக்கமில்லாமல் உள்ளதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக சங்கரன்கோவில் தேரடி வீதியில் தெருமுனை விளக்க கூட்டம் நடைபெற்றது.

பொதுமக்களின் நலன் கருதி நிருத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் இயக்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இந்த கூட்டம் நடைபெற்றது.பொதுமக்களின் நலன் கருதி தென்காசி மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா...?

 

Tags : 108

Share via