உத்திர பிரதேச மாநிலத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த 80 வயது முதியவர்

by Staff / 04-06-2023 04:03:06pm
உத்திர பிரதேச மாநிலத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த 80 வயது முதியவர்

உத்திர பிரதேச மாநிலத்தில் 80 வயது முதியவர் ஒருவர் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலைக்கு அடுத்துள்ள கோவில் வளாகத்தில் பூசாரியாக இருப்பவர் கன்ஷியாம் தாஸ். கோவில் வளாகத்தில் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். பண ஆசை காட்டி 8 வயது சிறுமியை கன்ஷியாம் தாஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்து, போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.

 

Tags :

Share via