செல்போன் தொலைந்ததால் இளைஞர் தற்கொலை

by Staff / 05-06-2023 04:40:38pm
செல்போன் தொலைந்ததால் இளைஞர் தற்கொலை

புதிதாக வாங்கிய செல்போன் தொலைந்து போனதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹைதராபாத் போரபண்டாவில் நடந்துள்ளது. சாய் என்ற இளைஞருக்கு அவரது தந்தை சமீபத்தில் ஒரு புதிய செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் சாய் அந்த செல்போனை தொலைத்து விட்டார். செல்போன் தொலைந்ததை தந்தையிடம் சொன்னால் அவர் திட்டுவார் என்று பயந்து, ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் சாய். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via