புளியரை காவல்துறை சோதனை சாவடியில் அதிக பணம் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் 

by Editor / 27-06-2023 08:17:37am
புளியரை காவல்துறை சோதனை சாவடியில் அதிக பணம் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்  தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியறையில் காவல் துறைக்கு  சோதனை சாவடி உள்ளது. தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டும். கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட  பொருட்கள் வருவதை தடுக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த சோதனைச் சாவடியில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 3 போலீசார் இரண்டு ஷிப்ட் அடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் வைக்கோல், காய்கறி,சிமெண்ட், உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களும் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன இதில் புளியரை காவல்துறை சோதனை சாவடியில் கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு  வாகனத்திற்கு ஏற்றார் போல்100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலும் வைக்கோல் லோடு உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு ஒரு வாகனத்திற்கு 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும் வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் என்பவர் வைக்கல் லோடு ஏற்றி செல்லும் வாகன ஓட்டுகளிடம் 500 ரூபாய் இருந்தால் தான் வைக்கோல் லோடு ஏற்றி செல்லும் வாகனங்கள் அனுமதிக்க முடியும் என்றும் நூறு ரூபாய் கொடுத்தவைகோல் லோடு ஓட்டிச் சென்ற வாகன ஓட்டுநரை உடனடியாக புளியரை காவல்துறை உதவி ஆய்வாளர் சங்கரனுக்கு தகவல் தெரிவித்து அவர் மூலமாக அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து விடு கின்ற பணிகளும் நடைபெற்றன காவல்துறை சோதனைச் சாவடியில் மிரட்டும் தொணியில் கேட்ட பணத்தை கொடுக்காத வாகன ஓட்டிகளுக்கு மாற்று  ஏற்பாடாக அவரது அபராதம் விதிக்க வைக்கும் பணிகள் நடைபெற்று வருவது மக்கள் மத்தியில் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதன் வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதைத்தொடர்ந்து   சிறப்பு உதவி ஆய்வாளர் ஜேம்ஸ்  தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் அவருடன் பணியில் இருந்த காளிராஜ் மற்றும் மகராஜன் ஆகிய இரண்டு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் போலீசார் பாத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
 

Tags :

Share via