ஆன்லைன் ரம்மிவிளையாட்டால் தனியார் வங்கி ஊழியர் தற்கொலை

by Editor / 29-06-2023 09:42:01pm
ஆன்லைன் ரம்மிவிளையாட்டால் தனியார் வங்கி ஊழியர் தற்கொலை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், வடக்குபுதூர்  கிராம்  வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரி ராஜா மகன் மாரிசெல்வம் (25). தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால் ரூ.25 லட்சம் பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். இந்த பணத்தில் ரூ.10 லட்சம் கடனை செலுத்திவிட்ட நிலையில், மீதமுள்ள ரூ.15 லட்சம் கடனை செலுத்த இயலாமல் தவித்துள்ளார். கடந்த இரண்டு வருடமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 15 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது.  இதனால் மன வேதனை அடைந்த மாரிச்செல்வம்  வீட்டில் விஷம் குடித்து மயங்கி நிலையில் இருந்தார். மயங்கி நிலையில் இருந்த மாரிச்செல்வம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாறிச்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். ஆன்லைன் ரம்மிவிளையாட்டால் தனியார் வங்கி ஊழியர் தற்கொலை
 

Tags :

Share via