ரூ.3.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் காவல்துறை பிரிவு

by Editor / 29-06-2023 09:31:44pm
 ரூ.3.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் காவல்துறை பிரிவு தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் காவல்துறை பிரிவை சென்னையில் இன்று காலை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இது குறித்து பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, &ldquo;இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் ட்ரோன் பிரிவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட டிரோன்கள் காவல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் 5 கி.மீ தொலைவு வரை இயக்க முடியும்&rdquo; என தெரிவித்துள்ளார். மேலும், ரூ.3.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் காவல்துறை பிரிவு போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், பண்டிகை காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கண்காணிப்பு மேற்கொள்ளவும் செயல்படுத்த உள்ளது.<br /> &nbsp;
 

Tags :

Share via