ஒசூர் அருகே விபத்து: 3 பேர் பலி

by Editor / 27-09-2021 04:02:02pm
ஒசூர் அருகே விபத்து: 3 பேர் பலி



ஒசூர் அருகே மோட்டார் சைக்கிள், ஆட்டோ மோதிக்கொண்டதில் 3 இளைஞர்கள் பலியாகி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர் அருகே மாலூர் சாலையில் பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலம் மாலூரிலிருந்து ஓசூரை நோக்கி, இருசக்கர வாகனத்தில் பாகலூரை சேர்ந்த அபீத் (21), சையப் (20) மற்றும் தருமபுரியை சேர்ந்த பூவரசன் (வயது 19) ஆகிய 3 இளைஞர்களும் வேகமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, பாகலூர் அருகே தனியார் தொழிற்சாலை முன்பாக 4 பயணிகளுடன் வந்த ஆட்டோ மீது, 3 இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு இரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

Tags :

Share via