சங்கரன்கோவிலில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்:
சங்கரன்கோவிலில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் காரணமாக நகரத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு தூய்மை பணிகள் எதுவுமே நடைபெறவில்லை. தனியார் நிறுவனங்களுக்கு கமிஷன் பெற்றுக்கொண்டு டெண்டர் முறையில் தூய்மைப் பணிகளை குறைந்த மதிப்புக்கு ஏலம் விடப்பட்டதாகவும், தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் குறைத்து கொடுக்கப்படுவதாகவும், கடந்து இரண்டு மாதமாக குறைந்த சம்பளமும் வழங்கப்படவில்லை எனவும் ,கையுறை, யூனிபார்ம், தூய்மை கருவிகள், மருத்துவ செலவு பணம் வழங்கப்படவில்லை எனவும், படிக்கத் தெரியாத தூய்மை பணியாளர்கள் ATM கார்டை வாங்கி வைத்துக்கொண்டு பல தில்லாலங்கடி வேலைகளை சங்கரன்கோவில் நகராட்சி பணியாளர்கள் செய்வதாகவும் , தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனையில் பல குளறுபடிகளை செய்து வருவதாகவும் தொடர் புகார்கள் எழுந்துள்ளன.
Tags :