எஸ்.ஐ மனைவியிடம் 12பவுன் நகை பறிப்பு 

by Editor / 01-07-2023 03:20:20pm
எஸ்.ஐ மனைவியிடம் 12பவுன் நகை பறிப்பு  மதுரை ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த தயாளன். இவர் மதுரை நகரில் உள்ள காவல் நிலையத்தில் எஸ்ஐ- யாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திருச்செல்வராணி.டியூஷன் படித்து வரும் குழந்தைகளை  அழைத்து செல்ல அலங்காநல்லூர் சாலை சந்திப்பில் சென்ற போது டூவீலரில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் திருச்செல்வராணி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க செயினை  பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.இது குறித்து ஊமச்சிகுளம்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Tags :

Share via