சிறுமியிடம் கான்ஸ்டபிள் கொடூரம்

by Staff / 07-07-2023 12:52:29pm
சிறுமியிடம் கான்ஸ்டபிள் கொடூரம் ஆந்திராவின் அனந்தபூரில் சிறுமியை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அனந்தபூரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் மகளைக் கவனிக்க ஒரு சிறுமி பணியமர்த்தப்பட்டார். ரமேஷ் அந்த சிறுமியை மிரட்டி ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி டிஎஸ்பியிடம் புகார் அளித்தார். இந்த நிலையில், ரமேஷ் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
 

Tags :

Share via