டிராக்டரில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

by Staff / 15-07-2023 12:10:06pm
டிராக்டரில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கவர்பனை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34). இவர், அதே ஊரை சேர்ந்த விவசாயி தர்மலிங்கம் என்பவருடைய தோட்டத்தில் மண் வெட்டும் டிராக்டரில் உழவு பணி செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக சக்திவேல் உழவு செய்த மண் வெட்டும் டிராக்டரில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து தோட்டத்தை சேர்ந்த விவசாயி, தர்மலிங்கத்திற்கு தகவல் கொடுத்தார். அவர் வீரகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான விவசாயி சக்திவேலுக்கு கன்னியம்மாள் என்ற மனைவி உள்ளார்.

 

Tags :

Share via