இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.180 கோடி ஒதுக்கீடு

by Staff / 15-07-2023 01:18:48pm
இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.180 கோடி ஒதுக்கீடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்துக்கு மத்திய அரசு ரூ.180 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த உதவியை முன்கூட்டியே வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், இந்த நிதியின் மூலம், மழைக்காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு, அவசர உதவிகளை வழங்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்திற்கு இடைக்கால நிவாரணமாக, 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒதுக்கீட்டின் இரண்டு தவணைகள் ரூ.180.40 கோடி முன்கூட்டியே வெளியிடப்படும். இதற்கு உள்துறை அமைச்சர் அனுமதி அளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via