உத்தமபாளையம் அருகே யானை மிதித்து விவசாயி பலி.

by Editor / 18-07-2023 10:52:36am
உத்தமபாளையம் அருகே யானை மிதித்து விவசாயி பலி.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கோடாங்கிபட்டியைச் சேர்ந்த முருகன்(50) என்பவர் செல்லம் மேஸ்திரி என்பவருக்கு கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில்,யானை துரத்திச் சென்று மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.இன்று காலை அப்பகுதிக்குச் சென்றவர்கள் முருகன் சடலமாகக் கிடந்ததை பார்த்து போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை.

 

Tags :

Share via