மோசடிநபர்களிடமிருந்து பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தா   திண்டுக்கல் எஸ்.பி.பாஸ்கரன்.

by Editor / 26-07-2023 04:09:44pm
மோசடிநபர்களிடமிருந்து பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தா   திண்டுக்கல் எஸ்.பி.பாஸ்கரன்.

திண்டுக்கல் மாவட்டம், A.வெள்ளோட்டைச் சேர்ந்த ஜெயந்தி மற்றும்,பாலகிருஸ்ணாபுரத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர்களை சில  மர்ம நபர்கள் TATA Capital கம்பெனியிலிருந்து கடன் தருவதாக கூறி ஆதார்கார்டு, பான்கார்டு, வங்கி விபரங்களை பெற்று  ரூ.51,548 மற்றும் ரூ.55,858 மொத்தம் ரூ.1,08,406/-ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்    .V.பாஸ்கரன்  உத்தரவுப்படி. கூடுதல் காவல் கண்காணிப்பாளர்    சந்திரன்  மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் .மீனா  மற்றும் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து இழந்த பணம் ரூ.1,08,406/-ஐ மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.பணத்தைபெற்றுக்கொண்ட அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கண்ணீர்மல்க நன்றியை தெரிவித்தனர்.

 

Tags :

Share via