முன்னாள் அமைச்சரிடம் ரூ.10 கோடி  நஷ்ட ஈடு கேட்டு நடிகை  வழக்கு

by Editor / 22-07-2021 05:31:49pm
முன்னாள் அமைச்சரிடம் ரூ.10 கோடி  நஷ்ட ஈடு கேட்டு நடிகை  வழக்கு

 

 முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டுநடிகை சாந்தினி  வழக்கு தொடுத்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த துணை நடிகை சாந்தினி கருக்கலைப்பு, பாலியல் பலாத்காரம், திருமண ஆசை காட்டி ஏமாற்றுதல் உட்பட பல புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், மலேசியாவை சார்ந்த துணை நடிகை சாந்தினி ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக நானும் - மணிகண்டனும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். 
தற்போது நடைபெற்று வந்த பிரச்சனையால், இங்கு தங்கி வழக்கை கவனித்து வருகிறேன். இதனால் எனக்கு பொருளாதார ரீதியாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கணவன் - மனைவி பிரச்சனை தொடர்பான விவகாரத்தில், ரூ.10 கோடி இழப்பீடு எனக்கு வேண்டும்.இந்த மனுவை விரைந்து விசாரித்து, இடைக்கால நிவாரண தொகையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் " என்று தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை ஏற்றுக்கொண்டுள்ள சைதாப்பேட்டை நீதிமன்றம், ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via