தீரன் சின்னமலை நினைவு தினம் நினைவு மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

by Staff / 03-08-2023 01:27:46pm
தீரன் சின்னமலை நினைவு தினம்  நினைவு மண்டபத்தில்  மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டையில் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோடு பிரிவு ரோட்டில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களின் நினைவு மண்டபத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு இன்று தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிகளின் போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், சேலம் வடக்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வகணபதி, அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள், திமுக கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via