ரயில்கள் நிறுத்தம்  தற்காலிகமாக திரும்பப் பெறப்படுவதாக ரயில்வே அறிவிப்பு.

by Editor / 28-02-2023 08:29:11am
 ரயில்கள் நிறுத்தம்  தற்காலிகமாக திரும்பப் பெறப்படுவதாக ரயில்வே அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் மற்றும் தூத்துக்குடி இடையே , ரயில்பாதை இரட்டிப்புப் பணி காரணமாக , தூத்துக்குடி மேலூரில், 02.03.2023 முதல் 31.03.2023 வரை, ஏற்கனவே உள்ள நடைமேடையை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை எளிதாக்கும் வகையில், தூத்துக்குடி மேலூரில் பின்வரும் ரயில்களின் நிறுத்தம் 02.03.2023 முதல் 31.03.2023 வரை தற்காலிகமாக திரும்பப் பெறப்படுகிறது.

1. 01.03.2023 முதல் 30.03.2023 வரை சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் எண். 12693 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி முத்து நகர் எக்ஸ்பிரஸ் 
2. ரயில் எண். 06848 வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி சிறப்பு ரயில் 
3. ரயில் எண். 06668 திருநெல்வேலி - தூத்துக்குடி சிறப்பு ரயில்
4. ரயில் எண். 06672 வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி சிறப்பு ரயில்
5. ரயில் எண். 06667 தூத்துக்குடி - திருநெல்வேலி சிறப்பு ரயில்
6. ரயில் எண். 06671தூத்துக்குடி - வாஞ்சிமணியாச்சி சிறப்பு ரயில்
7. ரயில் எண். 06847 தூத்துக்குடி - வாஞ்சிமணியாச்சி சிறப்பு ரயில்

 

Tags :

Share via