செல்போன் தராததால் சிறுமி தற்கொலை
ஐதராபாத்தில் உள்ள மைலார் தேவ் பள்ளியில் படித்து வரும் சிறுமி ஒருவர் தொலைபேசியில் பேசாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. கிங்ஸ் காலனியை சேர்ந்த மைனர் பெண் ஒருவர் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்து, போனை பறிமுதல் செய்தனர். இதனால் மனமுடைந்த சிறுமி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :