தென்காசியில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் "திமுக வா" - "பாஜக வா" கோஷங்கள் எழுப்பி அடித்து காட்டி அலறவிட்ட தொண்டர்கள்

by Staff / 06-08-2023 03:25:18pm
தென்காசியில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில்

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தென்காசி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
ரூ7 கோடியே 80 லட்சம்  மதிப்பீட்டில் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை கூடுதல் மண்டல ரயில்வே மேலாளர் ரமேஷ்பாபு தலைமையில் தென்காசி நாடளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார், சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், திமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் அதற்கான கல்வெட்டை திமுக எம்.பி திறந்து வைத்த நிலையில் திமுகவினர் திமுக வாழ்க, கலைஞர் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். இதனைதொடர்ந்து அதற்கு பாஜக தொண்டர்கள் பாஜக வாழ்க எனவும், "வேண்டும் வேண்டும், மீண்டும் மோடி" என்ற கோஷங்கள் எழுப்பியதால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via