மீண்டும் விபத்து புழலில் சினை எருமைகள் மூன்று உயிரிழப்பு

by Staff / 21-09-2023 04:27:31pm
மீண்டும் விபத்து புழலில் சினை எருமைகள் மூன்று உயிரிழப்பு

புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர் 14வது தெருவைச் சேர்ந்தவர் பாலா, 40; பால் வியாபாரி. இவருக்கு சொந்தமான, மூன்று எருமை மாடுகள் சினையாக இருந்தன. நேற்று அதிகாலை 5: 00 மணி அளவில், அவரது வீட்டருகே தாழ்வான நிலையில் தொங்கிய மின் கம்பிகள் திடீரென அறுந்து விழுந்து, அங்கு கட்டப்பட்டிருந்த மூன்று மாடுகளும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.இதைக்கண்ட பாபு அதிர்ச்சியில் உறைந்தார். இது குறித்து, புழலில் உள்ள, தமிழ்நாடு மின் வாரியத்தின் மீது, புழல் போலீசில் புகார் செய்தார். நேற்று காலை மின் வாரியத்தினரும் புகார் செய்தனர். அதில், அங்கிருந்த மரக்கிளை முறிந்து, மின் கம்பி மீது விழுந்துள்ளது. இதனால், கம்பிகள் அறுந்து விழுந்ததாக குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் நடந்த இடத்தை, வழக்கறிஞரும், தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற நலச்சங்கத்தின் தலைவருமான தங்க. சாந்தகுமார், 49, நேரில் பார்வையிட்டார். பின் அவர் கூறியதாவது: மின் கம்பி அறுந்து விழுந்த இடத்தில், மரம் ஏதும் இல்லை. இங்கு மட்டுமின்றி புழல், செங்குன்றம் சுற்றுவட்டாரத்தின், பல இடத்திலும், மின் கம்பிகள் தாழ்வான வகையிலும், அபாயகரமான நிலையிலும் தொங்கியபடியும் உள்ளன. மேலும், ஒட்டு போட்டும் பயன்பாட்டில் உள்ளன.

 

Tags :

Share via