சிறுமிக்கு பாலியல் தொல்லை:அதிமுக பிரமுகர் சிகாமணிக்கு பிடிவாரண்ட்
பரமக்குடி நகராட்சியின் 3-வது வார்டு அதிமுக கவுன்சிலர் வைகைநகர் சிகாமணி ஆவார்.. அதேபோல, மறத்தமிழர் சேனை என்ற அமைப்பின் மாநிலத் தலைவரான புதுமலர் பிரபாகரன், களஞ்சியம் ரெடிமேட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜாமுகமது ஆகியோர் 3 பேரும் சேர்ந்து 9ம் வகுப்பு மாணவியுடன் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்தவழக்கில் 5 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அதிமுக பிரமுகரான
சிகாமணிக்கு ஜாமீனில் வெளிவந்தநிலையில் அவர் வழக்குக்கு ஆஜராகாமல் இருந்துவந்ததால் அவருக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.சிகாமணி உள்பட 5 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் சிகாமணி ஜாமீனில் உள்ளார்.இந்த நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் மதுரை உயர்நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்துள்ள நிலையில், அவர் சரணடையாததால் பிடிவாரண்டுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags : சிறுமிக்கு பாலியல் தொல்லை:அதிமுக பிரமுகர் சிகாமணிக்கு பிடிவாரண்ட்