இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்
இமாச்சல பிரதேசத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாநிலத்தின் லாஹோல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக இருந்தது. பூமியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
Tags :