இந்திய கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 3-வது நாள் விவாதம் இன்று நடைபெறுகிறது. மக்களவையில் நேற்று இரண்டாம் நாள் விவாதம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ராகுல் காந்தி எம்.பி அனல் பறக்க பேசினார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி இன்று (ஆக.10) பதில் அளிப்பார் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் இந்திய கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :