குற்றாலம் பேரருவியில் ஆறாவது நாளாக குளிக்க தடை நீடிப்பு.

by Editor / 22-12-2023 01:43:14pm
குற்றாலம் பேரருவியில் ஆறாவது நாளாக குளிக்க தடை நீடிப்பு.

தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 16 ,17 ஆகிய தினங்களில் பெய்த கன மழை காரணமாக குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வரை குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவியில் வெள்ளம் நீடித்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது ஐயப்ப பக்தர்கள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் அருவிகளில் சென்று குளித்து சென்ற வண்ணம் உள்ளனர்

 

Tags : குற்றாலம் பேரருவியில் ஆறாவது நாளாக குளிக்க தடை நீடிப்பு.

Share via