கொல்லங்கோட்டில் ஆட்டோவில் கடத்திய மண்ணெண்ணெய் பறிமுதல்

by Staff / 12-08-2023 05:00:43pm
கொல்லங்கோட்டில் ஆட்டோவில் கடத்திய மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டு சஜிகுமாா் மற்றும் போலீசார், கிராத்தூா் பகுதியில் வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த கேரள பதிவெண் கொண்ட பயணிகள் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது ஆட்டோவில் 300 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. ஆட்டோ டிரைவர் தப்பியோடிவிட்டாா். ஆட்டோவுடன் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

 

Tags :

Share via