கொலை வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்து

by Staff / 07-05-2024 03:34:13pm
கொலை வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர்  ஆர்.பி. உதயகுமார் கருத்து

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், காவல்துறையை சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் கொலையாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் தேதி ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via