கொடைக்கானல் வனப்பகுதி சுற்றுலாத்தலங்கள் மூடல்
திண்டுக்கல்:மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வன சுற்றுலா தலங்களான மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதன் காரணமாக மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவித்துள்ளது. இந்த பணிகள் இன்று புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலாபகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுக்கான பணிகள் முடிவடைந்ததும், சுற்றுலா பயணிகள் மீண்டும் வனப்பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.என வனத்துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளதால் வனத்துறையினரின் இந்த அறிவிப்பினால் கொடைக்கானலுக்கு சுற்றுலாசென்றுள்ள பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Tags : கொடைக்கானல் வனப்பகுதி சுற்றுலாத்தலங்கள் மூடல்