அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை

by Staff / 19-08-2023 11:50:57am
அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும், நீட், JEE போன்ற நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் 21 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து நேற்று பேசிய ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், “போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது கவலை அளிக்கிறது, இதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு குழுவை அமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via