ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: சாலையோர வயலில் கவிழ்ந்த காா்
ஆரணி இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணவாளன்(66), ஓய்வு பெற்ற பொறியாளா். இவா், சொந்த வேலை காரணமாகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் நேற்று காலை மகன் பிரபுவை அழைத்துக் கொண்டு காரில் சென்னைக்கு சென்றுகொண்டிருந்தாா். காரை ஆரணியைச் சோ்ந்த ஓட்டுநா் மேகநாதன் ஓட்டிச் சென்றாா். ஆரணி-ஆற்காடு சாலையில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே சென்றபோது, ஓட்டுநருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், காா் சாலையோர விவசாய நிலத்தில் உள்ள நெல்பயிரில் கவிழ்ந்தது. இதில், 3 பேரும் காருக்குள் சிக்கி காயமடைந்தனா். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சென்று காா் கண்ணாடியை உடைத்து, 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆரணி கிராமிய போலீஸாா் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Tags :