தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம் முதலமைச்சர் பெருமிதம்.

by Editor / 27-08-2023 07:57:41pm
தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம் முதலமைச்சர் பெருமிதம்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து 2 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அந்த வாழ்த்து செய்தி வருமாறு:
தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்என்றும் 
கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்என்றும் - முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது முகநூலில்  பதிவு செய்துள்ளார்.

 

Tags : முதலமைச்சர் பெருமிதம்.

Share via